உள்ளூர் செய்திகள்

2 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Published On 2023-10-17 07:22 GMT   |   Update On 2023-10-17 07:22 GMT
  • விருதுநகர் அருகே 2 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, புகையிலை மற்றும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தீவிர ரோந்து சுற்றியும் வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜ பாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்ப தாக சேத்தூர் ஊரக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி கஞ்சா கடத்தி வந்ததாக அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் கனிய ராஜன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் கஞ்சா கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் கனியராஜன், குருவேந்திரன் மகன் மனோஜ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரிடமும் மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News