உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2024-12-12 21:51 IST   |   Update On 2024-12-12 21:51:00 IST
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகள் முழுக்கொள்ளவை எட்டிய நிலையில், நீர் திறந்துவிடப்பட்டதால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாக நிலையில், தற்போது கனமழை எச்சரித்துள்ளது.

Similar News