உள்ளூர் செய்திகள்

மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

அரசூரரில் மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2023-04-06 07:37 GMT   |   Update On 2023-04-06 07:37 GMT
  • குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது
  • இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும்

விழுப்புரம்:

திருவெண்ணெநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் பல தடவை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்க ளுக்கு அச்சம் ஏற்படுவதா கவும் திரௌ பதியம்மன் கோவில் திருவிழா நடைபெ றுவதால் சாமி வீதி உலா தேர் வீதி உலா வரும்பொழுது இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும் எனக்கூறி அரசூர் மின்வாரிய அலுவலகத்தை அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது திருவெ ண்ணெநல்லூர் உதவி செயற் பொறியாளர் பாக்கியராஜ், உதவி மின் பொறியாளர் மீனலோச்சனி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாழ்வாக உள்ள மின்கம்பத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகவும் அடிக்கடி அறுந்து விடும் மின்கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பி அமைத்து தருவதாகவும் கூறினார்

அதன் பேரில் போரா ட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். அதன் பிறகு உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News