உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
- விஏஓ லூர்து பிரான்சிசை கொலை செய்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- விஏஓ கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், விஏஓ லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
படுகாயம் அடைந்த லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஏஓ லூர்து பிரான்சிசை கொலை செய்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.