உள்ளூர் செய்திகள்
பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- வட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஓய்வூதிய காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முழக்கம்
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, வட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, வட்டத்தை சேர்ந்த வி.ஏ.ஒ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.