உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் சாய்பாபா கோவிலில் விஜயதசமி விழா
- சாய்பாபாவின் 105வது மகா சமாதி தினம், விஜயதசமி விழா நடந்தது.
- கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் சாய்பாபாவிற்கு விபூதி அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு சாய்பாபாவின் 105வது மகா சமாதி தினம், விஜயதசமி விழா நடந்தது. கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் சாய்பாபாவிற்கு விபூதி அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய்பாபா கோவில் நிர்வாகி சாய் முருகன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாட்ஷா,குமார், கோகு லகிருஷ்ணன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.