உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி ஆவினில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது

Published On 2022-08-13 05:21 GMT   |   Update On 2022-08-13 05:21 GMT
  • தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
  • பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பால் உற்பத்தி யாளர்கள் சங்கங்கள் பதிவு செய்வதிலும், புதுப்பித்தல், கட்டணம் வசூலித்தல் மற்றும் பால் கொள்முதலுக்கு காசோலை வழங்குவதில் முறைககேடு நடப்பதாக சென்னை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழு ஆய்வாளர் சத்தியசீலன், துணை மேலாளர் ரவி, செயல் அலுவலர் கோபி ஆகியோர் கொண்ட குழுவினர் பழனிசெட்டி பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், ரசீதுகள், அலுவலர்கள் கையெழுத்திட்ட கோப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர். இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில், முறைகேடுகள் குறித்து புகார் வந்ததால் இந்த சோதணை நடத்தப்பட்டடது.

ஆய்வுக்காக சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளோம். விசா ரணை முடிந்தபிறகு உண்மை நிலவரம் வெளிவரும் என்றனர்.

Tags:    

Similar News