உள்ளூர் செய்திகள்

ஓசூரில் துணிகரம்: மோட்டார்சைக்கிளை வழிமறித்து ஆட்டோ டிரைவர் கடத்தல்

Published On 2022-10-07 09:25 GMT   |   Update On 2022-10-07 09:25 GMT
  • 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்தி சென்றனர்.
  • ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்,

ஓசூர் தாலுகா புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஓசூர் ராம் நகரில் உள்ள அவரது உறவினர்கள் கிரி மற்றும் கார்த்திக் ஆகியோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி, தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். ஓசூரில் ராயக்கோட்டை கூட்டு ரோடு அமீரியா பெட்ரோல் பங்க் அருகில் சென்ற அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்தி சென்றனர். இந்த நிலையில சீனிவாசன், தனது உறவினர்கள் கிரி, கார்த்திக்கிற்கு செல்போன் மூலம் விவரத்தை கூறி, தன்னை யாரோ 3 பேர் கடத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இதன் பிறகு சிறிது நேரத்தில், சீனிவாசன் தனது மகள் சந்தியாவிற்கு வாட்ஸ் அப்பில் தன்னை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்தி செல்வதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் ஆட்டோ வாய்சில் மெசேஜ் செய்து அனுப்பினார். சீனிவாசனுக்கும், சப்படியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. அவர் கூலிப்படையை ஏவி, சீனிவாசனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெட்ரோல் பங்க் அருகில் அவரது மோட்டார்சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரை கடத்தியவர்கள் யார்? கள்ளக்காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு எதுவுமா என்று ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News