உள்ளூர் செய்திகள்

ஊக்கத் தொகையுடன் நெசவு பயிற்சி

Published On 2023-09-05 15:26 IST   |   Update On 2023-09-05 15:26:00 IST
  • கலெக்டர் தகவல்
  • ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை

வேலூர்:

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து வேலை வாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படும்.

பயிற்சியில் சேருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம் அல்லது வருகிற 14-ந் தேதி குடியாத்தம் ஸ்ரீபாலாஜி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News