உள்ளூர் செய்திகள்

வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-12 08:55 GMT   |   Update On 2023-03-12 08:55 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

வேலூர்:

வேலூர் விருப்பாட்சி புரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் வள்ளி தெய்வானை சமேத முருகர், தட்சிணாமூர்த்தி ,மகாவிஷ்ணு, பிரம்மா, ராகு,துர்க்கை மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களை வைத்து பூஜைகள் நடந்து வந்தது. இன்று காலை கணபதி ஹோமம் ,கோ பூஜை பூர்ணா ஹூதி நடந்தது.

இதையடுத்து யாகசாலை யில் வைக்கப்பட்டிருந்த புனித கலசம் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News