உள்ளூர் செய்திகள்

வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி

Published On 2022-09-17 09:37 GMT   |   Update On 2022-09-17 09:37 GMT
  • கோட்டை அகழியில் ஒத்திைக
  • பருவ மழை தொடங்க உள்ளதால் நடவடிக்கை

வேலுார்:

தமிழகத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை வெளுத்து வாங்கி விட்டது. பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பி வழிகிறது. பல நிரம்பும் சூழலில் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது தொடர்பான பயிற்சிகளை போலீசாருக்கு வழங்கும் படி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாக தேவி உத்தரவிட்டார். இதையடுத்து, கடல் சாரா மாவட்டங்களில் போலீசா ருக்கு மீட்பு, முதலுதவி குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் பணிகள் 3 நாட்கள் நடக்க உள்ளது.

இதன் அடிப்படையில் வேலுார் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சாதா ரண போலீசார் என 60 பேருக்கு பயிற்சிகள் அளிக் கும் பணிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.முதல் நாளான நேற்று முன்தினம் பாதிக்கப்பட் டவர்களுக்கு மீட்டு முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று வெள் ளத்தில் தத்தளித்தவர்களை மீட்பது குறித்து கோட்டை அகழியில் செயல் விளக்க மளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கமாண்டோ பிரிவு வேலுார் பொறுப் பாளர் ஸ்ரீதர் தலைமையி லான குழுவினர் பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News