உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2023-07-26 14:06 IST   |   Update On 2023-07-26 14:06:00 IST
  • அகரம் ஆற்றில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
  • தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் கருங்காலி ஊராட்சி, அகரம் ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியுடைய டிரைவர் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News