உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2022-10-19 10:12 GMT   |   Update On 2022-10-19 10:12 GMT
  • டிரைவர் தப்பியோட்டம்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டாற்றில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடி யாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலையில் குடியாத்தம் அடுத்த மேல் தனகொண்டபல்லி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News