உள்ளூர் செய்திகள்

பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

Published On 2023-10-18 14:48 IST   |   Update On 2023-10-18 14:48:00 IST
  • சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு
  • கும்பலுக்கு வலைவீச்சு

வேலூர்:

குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.ரோடு, விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன்(வயது 61). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தனது பைக் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரை

வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து பெட்டியை திறந்து பார்த்த போது பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குபேந்திரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News