உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வாலிபர் மர்ம சாவு

Published On 2023-10-14 08:07 GMT   |   Update On 2023-10-14 08:07 GMT
  • கொலையா? போலீசார் விசாரணை
  • நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூரோதயன் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் பூரோதயன் அங்கிருந்து சென்று விட்டார்.

இன்று காலை நிலத்தில் வழியாக சென்றவர்கள் பூரோதயன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூரோதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் நண்பர்களின் ஏற்பட்ட பிரச்சனையால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News