உள்ளூர் செய்திகள்

கட்டிட வேலையின் போது தவறி விழுந்து மேஸ்திரி சாவு

Published On 2023-05-05 15:40 IST   |   Update On 2023-05-05 15:40:00 IST
  • 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அருகே உள்ள சாத்து மதுரையை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவர் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது 2-வது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.

அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News