உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-09-02 15:02 IST   |   Update On 2023-09-02 15:02:00 IST
  • கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் மன உளைச்சலில் காணப்பட்டார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்தவர் சுபான் ( வயது 19). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள லாரி உடைக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவரது தாயார் வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அதேபோல் இவருடைய அண்ணனும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுபான் தன்னுடைய தாத்தாவுடன் செதுவாலையில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் சுபான் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுபான் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தாத்தா வீட்டின் கதவை தட்டினார்.

நீண்ட நேரமாகியும், கதவு திறக்காததால் உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுபான் தூக்கில் தொங்கியவாறு துடிதுடித்துக்கொண்டு இருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுபான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News