உள்ளூர் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு
- மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்
- 14-ந்தேதி முதல் நடக்கிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 135 விற்பனை யாளர்கள் மற்றும் 33 கட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற் கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி வரை பெறப்பட்டது.
தகுதியானவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலி டெக்னிக் கல்லூரியில் வருகிற 14-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நேர்முகத்தேர்வுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித் துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக கொண்டு வந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இந்த தகவலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.