உள்ளூர் செய்திகள்

182 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி கேட்டு மனு

Published On 2023-01-07 15:17 IST   |   Update On 2023-01-07 15:17:00 IST
  • ஆன்லைனில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
  • 182 விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்த வேண்டும். காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.

செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை.

ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி 182 விண்ணப்பம் அளிக்க பட்டுள்ளது.

வருகிற 9-ந் தேதி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News