கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்த காட்சி.
வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளந்து தரக்கோரி கிராம மக்கள் மனு
- குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் அளித்தனர்
- நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரி உறுதி
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமாலையை அடுத்த கணகர் குட்டை பகுதியிலும், பிள்ளை யார் கோவில் அருகிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை பட்டா வழங்கிய இடத்தை அளந்து உட் பிரிவு செய்து கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும் கணகர்குட்டையில் வழங்கப்பட்ட மனைகளில் வீடு கட்டாததால், அந்த இடத்தை வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ராமாலை ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவல கத்தில் துணை தாசில்தார் ரமேஷிடம், பட்டா வழங்கிய இடத்தை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.