கணியம்பாடியில் பகுதி நேர ரேசன் கடை
- நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன பாலம்பாக்கத்தில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலாகோபி, வெங்கடேசன், பாபு, ஒன்றிய கவுன்சிலர் லதாசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து பேசினார்.
இதனை தொடர்ந்து காட்டுப்புத்தூரில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 4 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்து வந்த பாப்பான்தோப்பில் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, சோழவரத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதில் பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.