கரும்பு தோட்டங்களில் அதிகாரி திடீர் ஆய்வு
- 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்
- திட்டத்தின் பலன்களை விரிவுப்படுத்த ஆலோசனை
வேலூர்:
வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை மூலம் செயல்படுத்தப்படும் கரும்பு மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் , கரும்பு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நடைமுறையில் கரும்பு கரணைகளை வெட்டிப் பயிரிடும் முறையால் ஏக்கருக்கு ரூ.12,000 அளவுக்கு, அதாவது 4 டன் கரும்புகள் செலவாகிறது. இதைத் தவிர்க்க கரும்பு பருசீவல் நாற்றுகள் தயார் செய்து அளிக் கப்படுகிறது.
இதன் மூலம் ஒரு டன் கரும்பு மூலம் ரூ.3,500 செலவில் 5,000 நாற்றுகள் உற்பத்தி செய்து அளிக்கப்படுகிறது. தவிர, கரும்பு ஆராய்ச்சி பனைகளில் இருந்து ஏக்கரைக்கு 60 டன் கரும்பு விளைச்சலை அதிகரிக்க கூடிய புதிய கரும்பு ரகங்களும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்படுகின்றன.
இந்த திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள் குறித்தும் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி வட்டாரத்துக்குட் பட்ட ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் தோட்டங்களில் அவர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், திட்டத்தின் பயன்களை மேலும் விரிவுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின் போது, துணை இயக் குநர் (சொட்டுநீர் பாசனம் ) ஆர் . விஸ்வநாதன், காட்பாடி வட்டார வேளாண்மை அலுவலர் முருகன், சர்க்கரை ஆலை கரும்பு மேம்பாட்டு அலுவலர் மு.வேலாயுதம், ஆலைப்பகுதி கரும்பு அலுவலர் எம்.சக்திவேல், கரும்பு மேம்பாட்டு உதவியாளர் சி.ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.