உள்ளூர் செய்திகள்

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Published On 2022-08-04 15:55 IST   |   Update On 2022-08-04 15:55:00 IST
  • வருகிற 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது
  • சரியான நேரத்திற்குள் வரவேண்டும்

வேலூர்:

வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை இளநிலை பட்டப்படிப்புக ளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.

வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில், மதிப் பெண் தரவரிசை பட்டி யல் அடிப்படையில், வரும் 8 ம் தேதி காலை 9.30 மணி யளவில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் என்சிசி, ஸ்போர்ட்ஸ், முன்னாள் படைவீரர், மாற்றுத்திற னாளிகள், இளம் விதவைகள், அந்தமான் , நிகோ பார் தீவுகளை சேர்ந்த தமிழர்கள் ஆகியோரை சார்ந்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடக் கிறது.

மறுநாள் 10-ந் தேதி கலைப்பாடப்பிரவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிர்த்து, பகுதி - 3, 400.

முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக் கிறது.

11-ந் தேதி தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 100 முதல் 90 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கும், ஆங்கிலத்தில் 100 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

13-ந் தேதி அறிவியல் பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட் டச்சத்து பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிர்த்து, பகுதி 3-ல், 400 முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற வர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வு நடைபெறும் போது, மாணவர்கள் தங்களின் உண்மை சான்றிதழ்களான 10 ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ்.

11-ம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ். 12 ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றி தழ், ஆதார் அடையாள அட்டை, வருவாய் சான் றிதழ், வங்கி கணக்கு புத்த கம் முதல் பக்கம் மற்றும் மேற்கண்ட சான்றிதழ்க க ளின் தலா 2 நகல்கள் கொண்டு வர வேண்டும்.

மாணவர் சேர்க்கை கட்டணம், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுக்கு 72,306, அறிவியல் பாடப் பிரிவுக்கு 72,336, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு 71,736 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன், உரிய கட்டணம் மற்றும் கொரோனா தடுப்பு கவசங்களுடன் வர வேண்டும். காலதாமதமாக வருபவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிமை கோர முடியாது.

இத்தகவலை கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News