உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.

சர்வதேச கழிவறை தின விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2022-11-19 13:39 IST   |   Update On 2022-11-19 13:39:00 IST
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • தரைப்பாலம் அமையும் இடத்தையும் ஆய்வு

வேலூர்:

சர்வதேச கழிவறை தினத்தையொட்டி வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு மூஞ்சூர் பட்டு வரை நடைபயணம் சென்றனர். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கணியம்பாடி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா, துணை தலைவர் கஜேந்திரன், தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் டான் பாஸ்கோ, கவுன்சிலர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மேட்டு இடையம் பட்டியில் சாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சாலை அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த இடங்களை மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி பார்வையிட்டார்.

இதேபோல் ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து வரும் கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்க உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News