உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மனோகரன் பேசினார்.

வேலூரில் ரூ.1,349 கோடி ஸ்மார்ட் சிட்டி நிதி சரியாக பயன்படுத்தவில்லை

Published On 2022-10-30 08:59 GMT   |   Update On 2022-10-30 08:59 GMT
  • பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
  • மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு குழு ஆயிரத்து 349 கோடி ஒதுக்கியது. அந்த நிதியை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வேலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மணல் குவாரியில் முறைகேடு

வேலூர் பிள்ளையார் குப்பத்தில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரத்தில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் எஸ். எல்.பாபு உள்பட கலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News