உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி தீக்குளித்து சாவு

Published On 2023-04-27 13:53 IST   |   Update On 2023-04-27 13:53:00 IST
  • வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி பெற்றோரிடம் தகராறு
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

காட்பாடி செங்குட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சார்ஜ் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்.இவருடைய மனைவி மெர்சி.காட்பாடி வேளாண்மை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுடைய மகன் சாம் ரிச்சர்ட் (வயது 31).மாற்றுத்திறனாளியான இவர் தனது பெற்றோரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த சாம்ரிச்சர்ட் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News