உள்ளூர் செய்திகள்

4 வயது மகனின் கைகளை பிளேடால் அறுத்த தந்தை

Published On 2023-08-29 14:56 IST   |   Update On 2023-08-29 14:56:00 IST
  • குடிபோதையில் அசம்பாவிதம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்( 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகன் மற்றும் 2 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

ராஜேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் திலகவதி கணவனை பிரிந்து தனது 2 வயது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 4 வயது மகன் அவரது தந்தை ராஜேசுடன் வசித்து வந்தான்.

இந்த நிலையில் திலகவதி நேற்று கணவனிடம் சென்று, 4 வயது மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டார். அப்போது ராஜேஷ் மகனை, மனைவியுடன் அனுப்ப மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து திலகவதி மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டார்.

சிறுவன் கைகள் அறுப்பு

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த ராஜேஷ் தனது கைகளால் பிளேடால் அறுத்துக் கொண்டு தனது 4 வயது மகனின் 2 கைகளையும் பிளேடால் அறுத்துள்ளார்.

அப்போது வலி தாங்க முடியாமல் துடித்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ராஜேஷிடமிருந்து குழந்தையை மீட்டனர்.

பின்னர் ரத்த காயங்களுடன் துடித்த 4 வயது சிறுவனை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் 4 வயது மகனின் கைகளை தந்தையே பிளேடால் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News