வரைவு வாக்காளர், ஓட்டுச்சாவடி பட்டியல் தொகுதி வாரியாக சரிபார்ப்பு
- 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்
- பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது
வேலூர்:
2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டியலில் பெயர், சேர்ப்பு, நீக்கல் தொடர்பான சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.
வேலூர் மாவட்டத்தி ற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க வசதியாக, நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் அடங்கிய பட்டியல், தேர்தல் ஆணையத்தில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொகுதி வாரியாக ஒவ்வொரு பக்கமும் மீண்டும் சரிபார்க்கப்படும்.
இதில் திருத்தம் இருப்பின், வருகிற 27-ந் தேதி நடக்கும் சுருக்கத்திருத்த பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சரிபார்ப்பு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் 5 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.