உள்ளூர் செய்திகள்

தி.மு.க. முப்பெரும் விழாவை வெற்றி பெறச்செய்வோம்

Published On 2023-09-04 10:23 GMT   |   Update On 2023-09-04 10:23 GMT
  • அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
  • வருகிற 17-ந் தேதி நடக்கிறது

வேலூர்:

வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க பவள விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றிபெற செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் டிசம்பர் 17-ந் தேதி சேலம் மாநகரில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி திறன் பட செயலாற்றி வரும் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் அவரது அரசியல் நகர்வுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க துணை நிற்கும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Tags:    

Similar News