உள்ளூர் செய்திகள்

2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆபரேட்டர்கள்.

மாநகராட்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் போராட்டம்

Published On 2023-05-17 14:54 IST   |   Update On 2023-05-17 14:54:00 IST
  • சம்பளம் வழங்க கோரிக்கை
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 2 மண்டலத்தில் குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள் 44 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு மாநக ராட்சியில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆபரேட்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்ைல. தெரிவித்தும் அவர்களுக்கு சம்பளம் வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் 44 பேரும் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி இன்று 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 2-வது மண்டல உதவி என்ஜினியர் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாகவும், இனிமேல் பணிக்கு வரும் ஊழியர்கள் தினமும் மண்டல அலுவலகத்தில் உள்ள வருகைப் பதிவு நோட்டில்கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.

அப்படி கையெழுத்திடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News