- 948 இடங்களில் நடந்தது
- பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று 948 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 32 வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 948 மையங்களில் இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.