உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்த காட்சி.

காங்கிரஸ் கட்சியினர் மறியல்

Published On 2023-03-23 14:51 IST   |   Update On 2023-03-23 14:51:00 IST
  • போலீசார் கைது செய்தனர்
  • தனியார் மண்டபத்தில் அடைப்பு

வேலூர்:

ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டீக்காராமல் தலைமையில் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மறியல் போராட்டத்தில் எஸ்சி, எஸ்டி மாநில செயலாளர் சித்தரஞ்சன் மண்டல தலைவர் ரகு, மாநில பொதுச் செயலாளர் கப்பல் மணி சுரேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாஹித் பாஷா வசிஷ்டன், காட்பாடி இளங்கோ. ரவி. மனோகரன். அசோக் குமார். உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News