உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-29 15:23 IST   |   Update On 2022-07-29 15:23:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் நகர, தாலுகா குழுக்கள் பேர்ணாம்பட்டு தாலுகா குழுக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்சார கட்டண உயர்வு அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் காத்தவராயன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், பேரணாம்பட்டு செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

நிர்வாகிகள் பாபு, குமாரி, ராமமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு சீனிவாசன், சாமிநாதன், மாவட்ட குழு குணசேகரன், குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News