- மணல் கொட்டி பொதுமக்கள் அணைத்தனர்
- பெரும் விபத்து தவிர்ப்பு
வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது வீட்டில் உள்ள மின் மீட்டர் எலக்ட்ரிக் பாக்ஸ் திடீரென இன்று காலை தீ பற்றி எரிந்தது.
இதனால் வீடு முழுவதும் புகை மண்டலம் எழுந்தது. அதிச்சியடைந்த அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சுகுமார் குடும்பத்தினர் மணல் எடுத்து வந்து மீட்டர் பாக்ஸ் மீது தூற்றினர்.
மணல் பட்டதில் மீட்டர் பாக்ஸில் தீ அணைந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் துணிகரமாக தீ அணைத்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தனர். மின் ஒயர் மீட்டர் பாக்ஸ் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் மணல், மரக்கட்டைகளை கொண்டு தீயை அணைக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்கக் கூடாது என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.