உள்ளூர் செய்திகள்

சைக்கிள் மீது பைக் மோதி வாலிபர் சாவு

Published On 2023-10-22 07:49 GMT   |   Update On 2023-10-22 07:49 GMT
  • சாலையை கடந்த போது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 26). இவர் கே.வி. குப்பத்தில் இருந்து காட்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சென்னாங்குப்பம் தனியார் பள்ளி அருகே சவுந்தரராஜன் என்பவர் சைக்கிளில் சாலையை கடந்தார். எதிர்பாராத விதமாக தனசேகர் ஓட்டிச் சென்ற பைக் சவுந்தரராஜன் சைக்கிள் மீது மோதியது.

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தனசேகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News