3 தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- 5-ந்தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
கலெக்டர் குமாரவேல்பாண் டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல், உயர்,நடு நிலை, தொடக்கப்பள்ளிக ளில் காலியாக உள்ள ஆசி ரியர் பணியிடங்களில் முற்றிலும் தற்காலிக நிய மிக்கப்பட உள்ளது.
காலிப்பணியிடங் களை தற்காலிகமாக நிரப்பிடும் போது பழங் குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மற்றும் பழங்குடி யினர் இல்லாதபட்சத்தில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசி ரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்ற வர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்விதிட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக் க்கும் முன்னுரிமை வழங்கப்ப டும்.
அல்லேரி, தொங்கு மலை, குடிகம் ஆகிய பகு திகளில் உள்ள தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தற் போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.
முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன் னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசி ரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) வரைய றுக்கப்பட்ட கல்வி தகுதி களுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்ற வர்கள்.
இடைநிலை ஆசிரி யர்கள் நியமனத்தில் பட் டியலினத்தவருக்கு முன் னுரிமையும் கடைபிடிக்க வேண்டும். பள்ளி அமைந் துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும்.
விண்ணப்பதாரர்க ளிடமிருந்து எழுத்து மூல மான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளு டன் மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.