உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகளுக்கு ரூ‌.32.26 லட்சம் நிதி ஒதுக்கீடு

Published On 2022-08-24 16:00 IST   |   Update On 2022-08-24 16:00:00 IST
  • மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
  • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

வேலூர்:

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்த உடனே பணிகளை தொடங்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும.

அணைக்கட்டு மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். சிமெண்டு தளத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்க மொத்தம் ரூ.32 லட்சத்து 26 ஆயிரம் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News