உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் வி.வி.ஆர். ராஜ்சத்யன், ஜனனீ பி.சதீஷ்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
- அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர்
- பூங்கொத்து கொடுத்து சந்திப்பு.
வேலூர்:
அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டலம் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் மண்டல செயலாளர்கள் வி.வி.ஆர். ராஜ்சத்யன், ஜனனீ பி.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
அப்போது அவரிடம் கழகப் பொதுக்குழுவில் ஒற்றை தலைமையில் கழகம் இயங்கவேண்டும். அதற்கு எடப்பாடி கே.பழனிசாமி கழக பொதுச் செயலாளராக தலைமை ஏற்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர்.
மேலும் பூங்கொத்து கொடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.