- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி , மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள்.
தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-
தமிழக முதல் - அமைச்சரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். காலை உணவு திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.இடைநிற்றல் இதன் மூலம் குறைந்துள்ளது என்றார்.
இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.