பைக் விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி
- 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகேஷ் வயது 33 குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 18)கல்லூரி மாணவர்.
பைக்குகள் மோதல்
பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் 21,துளசி நாதன் வயது 33 இவர்கள் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்று விட்டு குடியாத்தம் நோக்கி துவாரகேஷும் சக்திவேலும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டி ருக்கும்போது முருகேசனும், துளசி நாதனும் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து சொந்த கிராமமாக எருக்கும்பட்டு சென்று கொண்டி ருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
ஒருவர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்கு பேரும் தூக்கி வீப்பட்டனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த துவாரகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.