விவசாயி வீட்டில் 42 பவுன் நகை, பணம் கொள்ளை
- மயக்க மருந்து தெளித்து துணிகரம்
- முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் கைவரிசை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48), விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன் கள் உள்ளனர். இவரது வீட் டில்பெற்றோர் உள்பட 6 பேர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கதவுகளை பூட்டிவிட்டு தூங்க சென்ற னர். பாஸ்கரன், மனைவி மற் றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் பெற்றோர் ஹாலிலும் தூங்கிக்கொண்டி ருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு பாஸ்கரன் மயக்க நிலையில் எழுந்தார். அவரது பெற்றோர் கண் விழிக்காததால் அவர் களை எழுப்ப முயன்றார். அவர்களும் மயக்கமாக உள் ளது என கூறினர். வீட்டின் பின்பக்கம் உள்ள கதவு பூட் டிய நிலையில் இருந்தது. அந்த கதவு திறக்கப்படவில்லை. ஆகவே முன்பக்க கதவைத் திறந்து வெளியே, வந்து பின் பக்க கதவைத் திறந்தார். பின் னர் பெற்றோர் படுத்துக் கொண்டிருந்த எதிர் அறை திறந்து கிடந்ததை பார்த்தார்.
உடனே. அனைவரையும் தட்டி எழுப்பி உள்ளே சென்று பார்த்தபோது அறை யில் இருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் வைக்கப்பட்டி ருந்த நகைபெட்டியையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வைத்தி ருந்த பணப்பையையும் காண வில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அருகில் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் கதவுகளை உடைக்க முடியாமலும் பக் கத்து வீட்டில் இருந்த பன்னீர் செல்வம் என்பவரின் வீட்டில் உள்ளே சென்று பூஜை அறை யில் இருந்த அம்மன் தாலி சரடை திருடி செல்லாமல் சென்றுள்ளனர்.
மேலும் கெங்கநல்லூரில் 4 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பாஸ்கரன், மணி, பன்னீர் செல்வம் ஆகியோர் அணைக் கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநா வுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வந்து கைரேகை களை பதிவு செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
பாஸ்கரன் வீட்டில் நகைப் பெட்டியில் இருந்த 42 பவுன் நகைகளும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.7 லட் சம், ரூ.3 லட்சம், ரூ.1 1/2லட்சம் உள்ளிட்ட 3 ரொக்க பத்திரங் களும் திருட்டு போய் உள் ளது. முன்பக்க வாசல் வழி யாக மர்ம நபர்கள் வீட்டுக் குள் வந்து தூங்கி கொண்டி. ருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்துவிட்டு பின் பக்க வாசல் வழியாக திருடி சென்று உள்ளனர்.
பன்னீர்செல்வம் என்பது வீட்டில் திருடும்போது 2பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கெங் கநல்லூர் பகுதியில் இருக்கும் 4 வீடுகளில் திருட்டு நடந்துள் ளது. ஒரே இரவில் 7 வீடுக ளுக்கு மேல் 8 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளனர். நள்ளி ரவு 12 மணி முதல் 2 மணி வரை இந்த கொள்ளை சம்ப வம் நடந்திருக்கலாம். '
இவ்வாறு அவர்கள் கூறி
னர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.