ரூ.33.15 லட்சத்தில் பயிர் கடன் வழங்கும் விழா
- கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 54 பேர் பயனடைந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மற்றும் பலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் பயனாளிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பீஞ்சமந்தை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி குழு மு.பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 54 பயனாளிகளுக்கு ரூ.33.15 லட்சத்தில் பயிர் கடன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பலாம்பட்டு கிராமத்தில் பெரும்பல நோக்கு கூட்டுறவு புதிய கிளை, பகுதிநேர நியாயவிலைக் கடைக்கான அடிக்கல்லை நாட்டி விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சப் - கலெக்டர் கவிதா, வேலூர் மண்டல இணை பதிவாளர் முருகேசன், தாசில்தார் வேண்டா, துணை தாசில்தார் பிரகாசம், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.