உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனத்தில் இழந்த பணத்தை திருப்பி தரக்கோரி 1,500 மனுக்கள்

Published On 2022-07-24 09:10 GMT   |   Update On 2022-07-24 09:10 GMT
  • குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக மோசடி
  • கலெக்டர் அலுவலகத்தில் 1,500 பேர் மனு கொடுத்தனர்

வேலூர்:

தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனம் ஒன்று குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட் டது. பொதுமக்கள் தாங்கள் இழந்த பணத்தை திரும்பி பெறு வதற்காக அந்தந்த மாவட்டங்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை 1,500 பேர் மனுக்கள் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News