உள்ளூர் செய்திகள்

வேலூரில் சிவில் சர்வீஸ் தேர்வை 1317 பேர் எழுதினர்

Published On 2023-05-28 07:43 GMT   |   Update On 2023-05-28 07:43 GMT
  • 1,074 பேர் ஆப்சென்ட்
  • வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்

வேலூர்:

நாடு முழுவதும் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 தேர்வு மையங்களில் நடந்தது.

இதில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 391 பேரில், 1317 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

மீதமுள்ள 1,074 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. மேலும் தேர்வின் 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத சென்றவர்களை செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஊரீசு கல்லூரியில் நடந்த தேர்வை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News