உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம்

Published On 2023-07-01 08:41 GMT   |   Update On 2023-07-01 08:41 GMT
  • தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமானர் அனுஞ்ஞை, மகா கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யபூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பூஜை, மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள், குலசேகரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பத்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News