உள்ளூர் செய்திகள்

உறவினர் வீட்டில் தங்கியிருந்த வாலிபர்மாயம்

Published On 2023-03-01 15:30 IST   |   Update On 2023-03-01 15:30:00 IST
  • உறவினர் பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.
  • வெளியில் சென்ற குமரேசன் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

கிருஷ்ணகிரி, 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ராசி கவுண்டனூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 24).

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கருக்கம்பட்டியில் உள்ள தனது உறவினர் பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று பழனிசாமியிடம் குமரேசன் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற குமரேசன் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

இது குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான குமரேசனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News