உள்ளூர் செய்திகள்

பஸ்சில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டியபோது எடுத்தபடம்.

அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2023-02-14 07:20 GMT   |   Update On 2023-02-14 07:20 GMT
  • ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், கர்ப்பி

ணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக பஸ்களில் ஏறி, அதில் பயணம் செய்த பொதுமக்களிடம் சுகாதாரம், குழந்தைகளுக்கு செலுத்தபட வேண்டிய தடுப்பூசிகள், கர்ப்பிணி களுக்கான மருத்துவம் போன்றவை குறித்து எடுத்துக்கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றும் விதமாக போலி மருத்துவர்கள் வலம் வருவதாகவும், அவர்களிடம் யாரும் மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றும், அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருத்துவம் பார்க்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.

Tags:    

Similar News