உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

Published On 2023-03-11 07:45 GMT   |   Update On 2023-03-11 07:45 GMT
  • திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

விழுப்புரம்:

திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News