உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் 740 மாணவிகளுக்கு ரூ.5.14 லட்சம் மதிப்பில் சீருடைகள்

Published On 2023-11-19 15:28 IST   |   Update On 2023-11-19 15:28:00 IST
  • ஐ.வி.டி.பி நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்
  • ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி நிறுவனம், மாணவமாணவியருக்கு கல்வி உதவித்தொகை மட்டுமில்லாமல், அவர்க ளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு ஊக் கப்பரி சுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஏற்றத் தாழ்வுகளின்றி, சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூ ரிக்கு வரும் பொருட்டு சென்ற கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுக லை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து இக்கல்வி யாண்டும் இளங்க லை முத லாண்டு பயிலும் 640 மாணவிகளுக்கும் மற்றும் முதுகலை முதலா ண்டு பயிலும் 100 மாணவி களுக்கும் தலா ரூ.695- என மொத்தம் ரூ.5,14,300- மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலை வர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அவர் கள் வழங்கினார்.

விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் அவர்கள் இக்கல்லூரிக்கு இதுவரை ரூ.34.1 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட் டுள்ளதாகவும், அதனை சிறப்பான முறையில் பயன் படுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல் வர் முனைவர். குதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித் துக் கொண்டார்.

Similar News