உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

Published On 2022-09-10 09:50 GMT   |   Update On 2022-09-10 09:50 GMT
  • வாகனம் மோதி 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து தெரியவில்லை.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒசூரில் சாலையின் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு வாகனம் மோதி 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News